வியாழன், 19 நவம்பர், 2009

காசியில் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ?


சமீபத்தில் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் வாரணாசி (காசி) யை பற்றி செய்தி தொகுப்பு வெளியிட்டனர். இது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது என்றாலும் இது பற்றி நான் ஏற்கனவே அறிந்திருந்ததால் இந்நிகழ்ச்சி பெரிதளவில் என்னை பாதிக்கவில்லை. இதை
விட அதிர்ச்சி தரும் தகவல்களை இணையத்தில் கொடுத்துள்ளனர் அதுவும் படங்களுடன்.
அகோரிகளின் உணவு பழக்கங்கள், அவர்கள் போதையில் மிதப்பது போன்றவைகள் ஏற்கனவே மிகப்பெரிய தகவல்களாக இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கு பின்பற்றப்படும் வாழ்க்கை முறைகள் இதுபற்றி பலவிதமான சர்ச்சைகள் ஆன்மீக மற்றும் பகுத்தறிவுவாதிகளால் எழுப்ப்பட்டாலும் அது இப்பொழுதய விவாதப் பொருளாக நான் கருதவில்லை.

காசி ஒரு உலக சுடுகாடு, அங்கு 1 நிமிடத்திற்கு ஒரு சவம் எரிக்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு 1000 த்திற்கு மேற்பட்ட சவங்கள் எரியூட்டப்படுகின்றது மற்றும் மாயான காட்டில் இருக்கும் நெருப்பு என்றுமே அனைவதில்லை. இவையனைத்தும் அங்கு வழக்கமான ஒன்று தான் அனைவரும் அறிநத்தே.

அஙுகு எங்கும் நிகழாத என்னை ஆச்சாரியப்படுத்திய சில
விசயங்களையே பற்றியே ஆராய்ந்து கொண்டிருந்தேன் ஆனால் அது பற்றி அத்தொலைக்காட்சியில் தெளிவு படுத்தவில்லை. ஒரு வேலை இந்த பதிவு தெளிவுபடுத்துமானால் அது அனைவருக்கும் நலமே.


நான் இணையத்தில் தேடிய அதிசயத்தக்க விசயங்கள்




காசியில் (அதிகப்படியான ) பிணங்கள எரிக்கப்படும் பொழுது, பிணவாடைகள் வீசுவதில்லை ஏன்? (நான் போகவில்லை அதுபற்றி அரிதியிட்டு கூறமுடியாது பொதுவாகஅனைத்து தரப்பினரும் கூறுகின்றனர், தொலைக்காட்சியினரும் இதையே ஆமோதித்தனர்)





காசியில் பூக்கள் மணப்பதில்லை ஏன்?





காசியில் உள்ள கங்கையாற்றில் குறிப்பாக மணிகர்ணிகா காட் எனும் பகுதிகாளாகட்டும், காசயின் பிற பகுதிகளாகட்டும் என்னதான் அசுத்தங்கள் ஏற்படுத்தினாலும் அந்நீர் கெடுவதில்லை. அது ஏன்? (அங்கு வாழ்கின்ற் மக்களால் கூறப்படுவது)






மாடுகள் முட்டுவதில்லை அது ஏன்?

(குறிப்பு இது இங்குள்ள கோவில்களிலும் பல மாடுகள் முட்டுவதில்லை ஆனால் அங்கு எந்த இடத்திலும் முட்டுவதில்லை எனப்படுகின்றது)




பல்லி ஒலிப்பதில்லை ஏன்?





கருடன் பறப்பதில்லை ஏன்?



இதற்கான அறிவியல்காரணங்களை தேடுகின்றேன் கிடைக்கவில்லை.ஒரு வேளை சீதோஷ்ண நிலை காரணமாக இருக்குமோ? அல்லது அந்த சவங்களின் மீதுபோற்றப்படும் மஞ்சள் துணிகள் காரணமாக இருக்குமா?


கங்கையில் தூய்மைக்கேடு நிறைந்திருந்திருந்தாலும் அது ஒடும் பிராவகத்தினால் அவை மறைந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு்.


ஆனால் செப்பு குவளையில் பிடித்து வைக்கப்படும
கங்கைத் தண்ணீர் (பிணங்கள் எரிக்கும் இடத்திலிருந்து எடுத்தாலும்) பல மாதங்கள்ஆனாலும், ஏன் பல ஆண்டுகள்ஆனாலும், கெடுவதில்லை, என்பதற்கான காரணம் தெரியவில்லை.


ஒரு வேளை செப்பு குவளையில் வைக்கப்படும் அனைத்து (பிற ந்திகளிலிருந்து எடுத்த) தண்ணீரும் கெடாமல் இருக்குமா?


அதற்கு இல்லை என்றே பலரும் பதில் கூறுகின்றனர். பிற இடங்களில் இருந்தோ அல்லது பிற ஆறுகளிலிருந்தோ தண்ணீர் பிடித்து வைத்தால் ஒரு வாரத்தில் கெட்டு விடும் என்றே பதில் வருகின்றது. அது நமக்கும் தெரியும்.

அப்படியென்றால் கங்கை நீரில் கலந்திருப்பது என்ன?


இது பற்றி அத்தொலைக்காட்சியில் வெளியிடுவார்களா? என்று ஆவலுடன் எதிர் பார்த்தேன் ஆனால் அதை பற்றி ஒன்றையும் காணோம்.

மேற்கூறிய நிகழ்விற்கான புராணக் கதைகளின் காரணங்கள் ஒரளவுக்கு தெரியும். (அங்கு எரிக்கப்படும் பிணங்களின் வாடை வராமல் இருப்பதற்கான காரணத்தை தவிர, அதற்கான புராண கதைகளில் உள்ள
காரணமும் இருக்கும்.) ஆனால் அது இங்குத் தேவையில்லை. இதற்கான அறிவியல் காரணங்களேத் தேவை.

சமீபத்தில் சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் கங்கை நீரில் பி ஒ டிஅதாவது ஆக்சிஜன்அளவு அந்நீரில் மிகவும் குறைவாக இருப்பாதாக ஒரு
தகவலை வெளியிட்டுள்ளது. அப்படியிருக்க இந்த நீரை பருகினால் நோய்கள் அண்டாது என்றே பலரும் நம்புகின்றனர். ஒரு ஆங்கில ஆய்வாளர் இதை ஆராய்ந்ததில் இதில் மாசு எதுவும்
இல்லை என்று கூறியிருப்பதாக பிறர் சொல்ல அறிந்தேன். அது உண்மையா?


இது விஞ்ஞானத்தை மீறிய செயலாக இருக்குமா? அல்லது இன்னும் கண்டுபிடிக்கவில்லையா? அல்லது கண்டு பிடித்ததை
இன்னும் வெளியிடவில்லையா? ஒரு வேளை இந்தப் பதிவின் மூலம் கிடைக்கப்பெற்றால் .....................? பின்னூட்டத்தின் மூலம் எதிர்பார்க்கின்றேன்.

1 கருத்து:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு