"கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும், காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,ஓசைகளும் நம்மையறியாமலேயே நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன. பதிந்து நமக்குத் தெரியாமலேயே நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன."
வெள்ளி, 16 அக்டோபர், 2009
உடல் தானம் என்றால் என்ன, உறுப்பு தானம் என்றால் என்ன, கண் தானம் ??, இரத்த தானம் ??
உடல் உறுப்பு தானம் குறித்த எனது முதல் இடுகையானஇப்படியும் சிலர் : இதய தானம் குறித்த சில கேள்விகளும் பதில்களும் இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் பதிவர் தெக்கிட்டானின்உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs! இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் விளக்கமளிக்க இந்த இடுகை
உதிரக்கொடை (இரத்த தானம் ) :
ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து சுமார் 350 மிலி பெறப்படுவது இரத்த தானம்
எத்தனை முறை வேண்டுமானாலும் அளிக்கலாம்
சில நாட்களில் இரத்தம் மீண்டும் ஊறி விடும்
தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
பலன் : பிணியாளருக்கு. ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை காக்கலாம்
கண் தானம் :
ஒருவர் இறந்த பின் அவரது கண்கள் எடுக்கப்படும்.
இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
கண்கள் எடுக்கப்பட்ட பின் பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
எடுக்கப்பட்ட கண்களின் விழித்திரை அடுத்த நபருக்கு பொருத்தப்படும்
தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பலன் : விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு
ஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள் எடுக்கப்படும்
இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
எலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே இது கடை பிடிக்கப்படுகிறது
எடுக்கப்பட்ட எலும்புகள் எலும்பு வங்கியில் வைக்கப்படும்.
தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
பலன் : பல பிணியாளர்களுக்கு
உறுப்பு தானம் :
மூளை சாவு என்றால் மட்டுமே எடுக்கப்படும்
சிறுநீரகங்கள், ஈரல், இதயம், நுரையீரல், தோல் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்படும்
பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
பலன் : பல பிணியாளர்களுக்கு
உடல் தானம் :
இயற்கை மரணம் என்றால் மட்டுமே பெறப்படும்
உடல் உறவினர்களிடம் அளிக்கப்படாது
உடல் உடற்கூறியல் பிரிவில் வைக்கப்படும். முதல் வருட மாணவர்கள் உடற்கூறியல் குறித்து படித்த அறிவதற்காக உடல் பயன்படும்
அவ்வாறு தானம் அளிக்கப்பட்ட உடலிருந்து கண்களும், எலும்புகளும் எடுக்கப்படலாம். இவை பிணியாளர்களுக்கு பயன் படும்
பலன் : கண்களால் இருவருக்கு, எலும்புகளால் பல
பிணியாளர்களுக்கு, மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு
மூளை சாவு பற்றிய சில விபரங்கள் மருத்துவர் டெல்பின் விக்டோரியாவின் உடல் உறுப்புகள் தானம் இடுகையில் இருக்கின்றன
தமிழ் அகராதிகள்.
வீரமா முனிவர் அளித்த முதல் தமிழ் அகராதிக்குப் பிறகு வந்த பல தமிழகராதிகளும் அவற்றை அளித்த ஆசிரியர்களும் அவை வெளியான ஆண்டுகளும் இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
1. சதுரகராதி - வீரமா முனிவர் - 1732.2. பெப்ரியசு அகராதி - பெப்ரியசு - 1779.3. ராட்லர் தமிழ் அகராதி - பாகம் 1 - ராட்லர் - 1834.4. ராடர் தமிழ் அகராதி- பாகம் 2 - ராட்லர் - 1837.5. ராட்லர் தமிழ் அகராதி-பாகம் 3 - ராட்லர் - 1839.6. ராட்லர் தமிழ் அகராதி- பாகம் 4 - ராட்லர் - 1841.7. மானிப்பாய் அகராதி - யாழ்ப்பாணம் சந்திரசேகர பண்டிதர் மற்றும் சரவணமுத்துப் பிள்ளை - 1834. 8. சொற்பொருள் விளக்கம் - களத்தூர் வேதகிரி முதலியார் - 1850.9. போப்புத் தமிழ் அகராதி - ஜி.யு.போப் - 1869.10. அகராதிச் சுருக்கம் - விஜயரங்க முதலியார் - 1883.11. பேரகராதி - காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு - 1893.12. தரங்கம்பாடி அகராதி - பெரியசு அகராதியின் விரிவு - 1897.13. தமிழ்ப் பேரகராதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1899.14. தமிழ்ப் பேரகராதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1901.15. தமிழ்ச் சொல்லகராதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1904.16. சிறப்புப் பெயர் அகராதி - ஈக்காடு இரத்தினவேல் முதலியார் - 1908.17. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி - பி.ஆர். இராமநாதன் - 1909.18. அபிதானசிந்தாமணி - ஆ.சிங்காரவேலு முதலியார் - 1910.19. தமிழ்ச் சொல் அகராதி, முதல் தொகுதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1910.20. தமிழ்ச் சொல் அகராதி, இரண்டாம் தொகுதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1912.21. தமிழ்ச் சொல் அகராதி, மூன்றாம் தொகுதி:- யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1923.22. தமிழ் மொழி அகராதி - காஞ்சி நாகலிங்க முனிவர் - 1911.23. இலக்கியச் சொல் அகராதி - கன்னாகம் அ. குமாரசாமி பிள்ளை - 1914-.24. மாணவர் தமிழ் அகராதி - எஸ். அனவரத விநாயகம் பிள்ளை - 1921.25. சொற்பொருள் விளக்கம் - சு.சுப்பிரமணிய சாஸ்திரி - 1924-.26. தற்காலத் தமிழ்ச் சொல் அகராதி - ச. பவானந்தம் பிள்ளை - 1925.27. இளைஞர் தமிழ்க் கையகராதி - மே.வீ. வேணுகோபாலபிள்ளை - 1928.28. ஜுபிலி தமிழ் அகராதி - எஸ். சங்கரலிங்கமுதலியார் - 1935.29. ஆனந்தவிகடன் அகராதி - ஆனந்த விகடன் பத்திரிக்கை ஆசிரியர் குழு - 1935.30. நவீன தமிழ் அகராதி - சி.கிருஷ்ணசாமி பிள்ளை - 1935.31. மதுரைத் தமிழ்ப் பேரகராதி - மதுரை இ.மா.கோபாலகிருஷ்ணக் கோனார் மற்றும் பண்டிதர் பார் - 1937.32. சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி - சுவாமி ஞானப் பிரகாசம் - 1938.33. தமிழறிஞர் அகராதி - சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை - 1839.34. தமிழ் அமிழ்த அகராதி - சி.கிருஷ்ணசாமிப் பிள்ளை - 1939.35. விக்டோரியா தமிழ் அகராதி - எஸ். குப்புஸ்வாமி- 1939.36. தமிழ் லெக்ஸஸிகன் - சென்னைப் பல்கலைகழகம் - 1939.37. கழகத் தமிழ் அகராதி - சேலை சகாதேவ முதலியார் மற்றும் காழி சிவகண்ணுச் சாமி பிள்ளை - 1940.38. செந்தமிழ் அகராதி - ந.சி. கந்தையாப் பிள்ளை - 1950.39. கமபர் தமிழ் அகராதி - வே. இராமச் சந்திர சர்மா - 1951.40. சுருக்கத் தமிழ் அகராதி - கலைமகள் பத்திரிக்கை - 1955.41. கோனார் தமிழ்க் கையகராதி - ஐயன் பெருமாள்க் கோனார் - 1955.42. தமிழ் இலக்கிய அகராதி - பாலூர் து. கண்ணப்ப முதலியார் - 1957.43. கழகத் தமிழ் அகராதி - கழகப் புலவர் (சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) - 1964-.44. லிஃப்கோ தமிழ் அகராதி - லிஃப்கோ புத்தக நிறுவனம் - 1969..45. தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி - அனந்தநாராயணன் -1980.46. தமிழ்-அகர முதலி - மு சண்முகம் பிள்ளை - 1984-.47. செந்தமிழ் சொற்பியல் பேரகர முதலி - தேவநேயப்பாவாணர் - 1984.48. பழந்தமிழ் சொல் அகராதி - (5-தொகுதிகள்) - புலவர் த கோவேந்தன் -1985.49. திருமகள் கையகராதி - புலவர் த. கோவிந்தன் மற்றும் கீதா - 1995.50. மலேசியச் செந்தமிழ் அகராதி - டாக்டர் ஜி.பி. இலாசரஸ் - 1997.51. வசந்தா தமிழ் அகராதி - புலவரேறு அரிமதி தென்னகன் - 2000.52. நர்மதா தமிழ் அகராதி - நர்மதா பதிப்பகத்தின் புலவர் குழு -2003.
1. சதுரகராதி - வீரமா முனிவர் - 1732.2. பெப்ரியசு அகராதி - பெப்ரியசு - 1779.3. ராட்லர் தமிழ் அகராதி - பாகம் 1 - ராட்லர் - 1834.4. ராடர் தமிழ் அகராதி- பாகம் 2 - ராட்லர் - 1837.5. ராட்லர் தமிழ் அகராதி-பாகம் 3 - ராட்லர் - 1839.6. ராட்லர் தமிழ் அகராதி- பாகம் 4 - ராட்லர் - 1841.7. மானிப்பாய் அகராதி - யாழ்ப்பாணம் சந்திரசேகர பண்டிதர் மற்றும் சரவணமுத்துப் பிள்ளை - 1834. 8. சொற்பொருள் விளக்கம் - களத்தூர் வேதகிரி முதலியார் - 1850.9. போப்புத் தமிழ் அகராதி - ஜி.யு.போப் - 1869.10. அகராதிச் சுருக்கம் - விஜயரங்க முதலியார் - 1883.11. பேரகராதி - காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு - 1893.12. தரங்கம்பாடி அகராதி - பெரியசு அகராதியின் விரிவு - 1897.13. தமிழ்ப் பேரகராதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1899.14. தமிழ்ப் பேரகராதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1901.15. தமிழ்ச் சொல்லகராதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1904.16. சிறப்புப் பெயர் அகராதி - ஈக்காடு இரத்தினவேல் முதலியார் - 1908.17. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி - பி.ஆர். இராமநாதன் - 1909.18. அபிதானசிந்தாமணி - ஆ.சிங்காரவேலு முதலியார் - 1910.19. தமிழ்ச் சொல் அகராதி, முதல் தொகுதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1910.20. தமிழ்ச் சொல் அகராதி, இரண்டாம் தொகுதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1912.21. தமிழ்ச் சொல் அகராதி, மூன்றாம் தொகுதி:- யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1923.22. தமிழ் மொழி அகராதி - காஞ்சி நாகலிங்க முனிவர் - 1911.23. இலக்கியச் சொல் அகராதி - கன்னாகம் அ. குமாரசாமி பிள்ளை - 1914-.24. மாணவர் தமிழ் அகராதி - எஸ். அனவரத விநாயகம் பிள்ளை - 1921.25. சொற்பொருள் விளக்கம் - சு.சுப்பிரமணிய சாஸ்திரி - 1924-.26. தற்காலத் தமிழ்ச் சொல் அகராதி - ச. பவானந்தம் பிள்ளை - 1925.27. இளைஞர் தமிழ்க் கையகராதி - மே.வீ. வேணுகோபாலபிள்ளை - 1928.28. ஜுபிலி தமிழ் அகராதி - எஸ். சங்கரலிங்கமுதலியார் - 1935.29. ஆனந்தவிகடன் அகராதி - ஆனந்த விகடன் பத்திரிக்கை ஆசிரியர் குழு - 1935.30. நவீன தமிழ் அகராதி - சி.கிருஷ்ணசாமி பிள்ளை - 1935.31. மதுரைத் தமிழ்ப் பேரகராதி - மதுரை இ.மா.கோபாலகிருஷ்ணக் கோனார் மற்றும் பண்டிதர் பார் - 1937.32. சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி - சுவாமி ஞானப் பிரகாசம் - 1938.33. தமிழறிஞர் அகராதி - சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை - 1839.34. தமிழ் அமிழ்த அகராதி - சி.கிருஷ்ணசாமிப் பிள்ளை - 1939.35. விக்டோரியா தமிழ் அகராதி - எஸ். குப்புஸ்வாமி- 1939.36. தமிழ் லெக்ஸஸிகன் - சென்னைப் பல்கலைகழகம் - 1939.37. கழகத் தமிழ் அகராதி - சேலை சகாதேவ முதலியார் மற்றும் காழி சிவகண்ணுச் சாமி பிள்ளை - 1940.38. செந்தமிழ் அகராதி - ந.சி. கந்தையாப் பிள்ளை - 1950.39. கமபர் தமிழ் அகராதி - வே. இராமச் சந்திர சர்மா - 1951.40. சுருக்கத் தமிழ் அகராதி - கலைமகள் பத்திரிக்கை - 1955.41. கோனார் தமிழ்க் கையகராதி - ஐயன் பெருமாள்க் கோனார் - 1955.42. தமிழ் இலக்கிய அகராதி - பாலூர் து. கண்ணப்ப முதலியார் - 1957.43. கழகத் தமிழ் அகராதி - கழகப் புலவர் (சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) - 1964-.44. லிஃப்கோ தமிழ் அகராதி - லிஃப்கோ புத்தக நிறுவனம் - 1969..45. தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி - அனந்தநாராயணன் -1980.46. தமிழ்-அகர முதலி - மு சண்முகம் பிள்ளை - 1984-.47. செந்தமிழ் சொற்பியல் பேரகர முதலி - தேவநேயப்பாவாணர் - 1984.48. பழந்தமிழ் சொல் அகராதி - (5-தொகுதிகள்) - புலவர் த கோவேந்தன் -1985.49. திருமகள் கையகராதி - புலவர் த. கோவிந்தன் மற்றும் கீதா - 1995.50. மலேசியச் செந்தமிழ் அகராதி - டாக்டர் ஜி.பி. இலாசரஸ் - 1997.51. வசந்தா தமிழ் அகராதி - புலவரேறு அரிமதி தென்னகன் - 2000.52. நர்மதா தமிழ் அகராதி - நர்மதா பதிப்பகத்தின் புலவர் குழு -2003.
பெண்களே இல்லாத நாடு. காரணம்? (தொடர்ச்சி) சிறிய விரல்; சுண்டு விரல்


1504ம் ஆண்டு இரண்டாம் ஜூலியஸ் இத்தாலியை ஆட்சி செய்துவந்தான். சர்வ அதிகாரத்தோடு ஆட்சி செய்த இவன், கொஞ்சம் கொஞ்சமாக இரக்க குணம் படைத்த மன்னனாக மாறத் தொடங்கினான். மக்களிடம் மதிப்பும் மரியாதையும் பெறத் தொடங்கிய அவன், “நான் இப்படி திடீரென மாறக் காரணம் என்ன?” என ஆராயத் தொடங்கினான்.
இயேசு நாதரின் ஆசிர்வாதமே என தெரிந்துக் கொண்ட இவன் பைபிளை படிக்கத் தொடங்கினான். பின் படித்ததை கண்முன் நிறுத்திப்பார்க்க ஆசைப்பட்டான். அப்போதுதான் மகா சிற்பி “மைக்கேல் ஏஞ்சலோ” மனதில் தோன்றினார். உடனே அவருக்கு அழைப்பு விடுத்தான்.
“வாடிகன் நகரில் இருக்கும் மிகப்பெரிய தேவாலயமான சிஸ்டைன் மாதா கோவிலின் மேற்கூரையில் பைபிளில் உள்ள முக்கிய உயிரோட்டமான பகுதிகளை ஓவியமாக தீட்டவேண்டும் உடனே அதற்கான வேலையில் இறங்கவேண்டும்” இது அப்போது போப் ஆண்டவராக இருந்த இரண்டாம் ஜூலியின் கட்டளை.
அதற்கு மறுப்பு தெரிவித்த ஏஞ்சலோ. “நான் வெறும் சிற்பியே. ஓவியன் அல்ல. என்னால் முடியாது” என மறுப்பு தெரிவித்துவிட்டார். பதிமூன்று அடி உயரம் இறுக்கமான உருண்டு திரண்ட தசைகளுடன் டேவிட் சிலையை வடித்த உங்களால் மட்டுமே பத்தாயிரம் சதுர அடி பரப்பில் ஓவியங்களை தீட்ட முடியும்; தயவு செய்து இப்பணியை ஏற்றுக் கொள்ளுங்கள் என இரண்டாம் ஜூலியஸ் வேண்டுகோள் வைக்க மைக்கேல் ஏஞ்சலோ இக்கஷ்டமான வேலையை ஏற்றுக்கொண்டார்.
ஆதாமின் பிறப்பு, ஏவாளின் படைப்பு, உலகத்தில் மற்ற உயிர்கள் தோன்றல், மனித இனம் உருவாதல், மனித இனம் நன்மை, தீமைகளை பிரித்து அறிய பழகிக் கொண்ட விதம் என பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் அத்தனை பைபிள் காட்சிகளையும் ஏஞ்சலோ மிக அற்புதமாக தூரிகைகளால் படைத்த விதம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் போற்றப்பட்டது.
இயேசு நாதரின் ஆசிர்வாதமே என தெரிந்துக் கொண்ட இவன் பைபிளை படிக்கத் தொடங்கினான். பின் படித்ததை கண்முன் நிறுத்திப்பார்க்க ஆசைப்பட்டான். அப்போதுதான் மகா சிற்பி “மைக்கேல் ஏஞ்சலோ” மனதில் தோன்றினார். உடனே அவருக்கு அழைப்பு விடுத்தான்.
“வாடிகன் நகரில் இருக்கும் மிகப்பெரிய தேவாலயமான சிஸ்டைன் மாதா கோவிலின் மேற்கூரையில் பைபிளில் உள்ள முக்கிய உயிரோட்டமான பகுதிகளை ஓவியமாக தீட்டவேண்டும் உடனே அதற்கான வேலையில் இறங்கவேண்டும்” இது அப்போது போப் ஆண்டவராக இருந்த இரண்டாம் ஜூலியின் கட்டளை.
அதற்கு மறுப்பு தெரிவித்த ஏஞ்சலோ. “நான் வெறும் சிற்பியே. ஓவியன் அல்ல. என்னால் முடியாது” என மறுப்பு தெரிவித்துவிட்டார். பதிமூன்று அடி உயரம் இறுக்கமான உருண்டு திரண்ட தசைகளுடன் டேவிட் சிலையை வடித்த உங்களால் மட்டுமே பத்தாயிரம் சதுர அடி பரப்பில் ஓவியங்களை தீட்ட முடியும்; தயவு செய்து இப்பணியை ஏற்றுக் கொள்ளுங்கள் என இரண்டாம் ஜூலியஸ் வேண்டுகோள் வைக்க மைக்கேல் ஏஞ்சலோ இக்கஷ்டமான வேலையை ஏற்றுக்கொண்டார்.
ஆதாமின் பிறப்பு, ஏவாளின் படைப்பு, உலகத்தில் மற்ற உயிர்கள் தோன்றல், மனித இனம் உருவாதல், மனித இனம் நன்மை, தீமைகளை பிரித்து அறிய பழகிக் கொண்ட விதம் என பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் அத்தனை பைபிள் காட்சிகளையும் ஏஞ்சலோ மிக அற்புதமாக தூரிகைகளால் படைத்த விதம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் போற்றப்பட்டது.
மின்சார விளக்குகள், நவீன பெயிண்ட்கள், முன்மாதிரி ஓவியங்கள் எதுவுமே இல்லாத அக்காலத்தில் இரவு, பகல் என்று பாராமல் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முயற்சி செய்து வரைந்த இவ்வோவியம் உலகின் தலைசிறந்த முதல் ஓவியமாக திகழ்கிறது.சிஸ்டைன் மாதாக் கோயில் கூரை முழுவதும் மனிதனின் அசைவில் ஏற்படும் மடிப்புகளை, முக மாற்றங்களை, அங்கங்களைக்கூட இவர் 340 ஓவியர்கள் மூலம் தத்ரூபமாக வரைந்திருந்தாலும் இவரது தலையாய படைப்பு என்ன தெரியுமா?
ஆதாமின் பிறப்புதான். உயிரற்ற உடம்பாக முதலில் ஆதாமை படைத்த இறைவன் பின் ஆதாமின் சுண்டு விரலை இறவன் தீண்டியதால் ஆதாம் உயிர் பெற்று எழுந்ததாகச் சொல்லும் பைபிள் காட்சியை மைக்கேல் ஏஞ்சல் ஓவியமாக தீட்டியது ஓவியர்களுக்கு வேதமாக அந்த ஓவியம் திகழ்கிறது. இறைவன் ஆதாமின் சிறிய விரலை சுண்டி உயிர்பெற வைத்தல் சிறிய விரலை நாம் சுண்டு விரல் என அழைத்து வருகிறோம்.
பெண்களே இல்லாத நாடு எது? காரணம்?

வாடிகன் நகரம்தான். ‘தி ஹோலி ஸி’ என அழைக்கப்படும் நாட்டில் பெண்களே இல்லை.
கத்தோலிக்கத்தின் தலைமையிடம் அல்லது போப்பாண்டவர்களின் இருப்பிடமாக உள்ளதால் இங்கே பெண்களே கிடையாது. குடும்பம் நடத்துவதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படாத நாடும் கூட.
0.4 ச.கி.மீ. பரப்பு கொண்ட இந்நாடு இத்தாலியின் ரோம் நகருக்குள் அமைந்துள்ளது. 1859, 1860 மற்றும் 1870ல் இத்தாலியோடு இணைக்கப்பட்ட இந்நாடு, 1929 முதல் தனி நாடாக செயல்பட்டு வருகிறது.
போப் ஆண்டவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்நாடு, ஓவியக்கலையின் தாயகமாக இந்நாடு செயல்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்புக் காரணம் “மைக்கேல் ஏஞ்சலோ” என்னும் ஓர் சிற்பியே ஆகும்.
கத்தோலிக்கத்தின் தலைமையிடம் அல்லது போப்பாண்டவர்களின் இருப்பிடமாக உள்ளதால் இங்கே பெண்களே கிடையாது. குடும்பம் நடத்துவதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படாத நாடும் கூட.
0.4 ச.கி.மீ. பரப்பு கொண்ட இந்நாடு இத்தாலியின் ரோம் நகருக்குள் அமைந்துள்ளது. 1859, 1860 மற்றும் 1870ல் இத்தாலியோடு இணைக்கப்பட்ட இந்நாடு, 1929 முதல் தனி நாடாக செயல்பட்டு வருகிறது.
போப் ஆண்டவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்நாடு, ஓவியக்கலையின் தாயகமாக இந்நாடு செயல்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்புக் காரணம் “மைக்கேல் ஏஞ்சலோ” என்னும் ஓர் சிற்பியே ஆகும்.
மனிதனால் முடியுமா?
இயற்கையின் அற்புதங்கள் அவிழும்போது ஆச்சரியம் மிகுகிறது.அந்த அற்புதங்கள் அழிவதை அறியும்போது வேதனை யில் நெஞ்சம் வேகிறது.
மனிதன் தனது சுயநலத்திற்காக இயற்கை தேவதையை சிதைக்கிறான்; வதைக்கிறான். அவனது வதைப்படலம் தொடருகிறது.
அந்த வதைப்படலத்தில் அழிந்துகொண்டிருக்கும் ஒரு அற்புத பறவையை கண்டுபிடித்து நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அது, மிகச்சிறிய உடலமைப்பு கொண்டது. ஆனால், அதன் உடலைமைப்பைப் போல இருமடங்கு நீண்ட வால் உடையது. அந்த வாலின் நுனி கரண்டியின் அகன்ற வாயைப் போல இருக்கிறது. அதனால் இதனை கரண்டி வால் பாடும் பறவை என அழைக்கின்றனர்.
ஆண் மயிலுக்கு நீண்ட தோகை இருப்பதுபோல, ஆண் பறவைக்கு மட்டுமே இந்த நீண்ட வால் இருக்குமாம். உலகில் இந்த வகைப் பறவைகள் 250 முதல் ஆயிரம்தான் இருக்கின்றனவாம்.இவை தமது வால் அசைப்பின் வேகத்தில்தான் தங்கள் ஜோடியை ஈர்க்கின்றனவாம்.
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் இவை காணப்படுகின்றன. அழிந்துவரும் இந்த அற்புதப் பறவையை பாதுகாக்க மலைப்பகுதிகளில் சரணாலயம் அமைக்க பறவை பாதுகாப்பு அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன.
மலைச்சாரலை பணப்பயிர் விளைவிக்கும் நோக்கில் மனிதன் அழித்து வருகிறான். மலைச்சாரலையே தமது வாழ்விடமாகக் கொண்டுள்ள இந்தப் பறவைகளுக்கு வேறு புகலிடம் ஏற்படுத்தி தர மனிதனால் முடியுமா?
மனிதன் தனது சுயநலத்திற்காக இயற்கை தேவதையை சிதைக்கிறான்; வதைக்கிறான். அவனது வதைப்படலம் தொடருகிறது.
அந்த வதைப்படலத்தில் அழிந்துகொண்டிருக்கும் ஒரு அற்புத பறவையை கண்டுபிடித்து நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அது, மிகச்சிறிய உடலமைப்பு கொண்டது. ஆனால், அதன் உடலைமைப்பைப் போல இருமடங்கு நீண்ட வால் உடையது. அந்த வாலின் நுனி கரண்டியின் அகன்ற வாயைப் போல இருக்கிறது. அதனால் இதனை கரண்டி வால் பாடும் பறவை என அழைக்கின்றனர்.
ஆண் மயிலுக்கு நீண்ட தோகை இருப்பதுபோல, ஆண் பறவைக்கு மட்டுமே இந்த நீண்ட வால் இருக்குமாம். உலகில் இந்த வகைப் பறவைகள் 250 முதல் ஆயிரம்தான் இருக்கின்றனவாம்.இவை தமது வால் அசைப்பின் வேகத்தில்தான் தங்கள் ஜோடியை ஈர்க்கின்றனவாம்.
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் இவை காணப்படுகின்றன. அழிந்துவரும் இந்த அற்புதப் பறவையை பாதுகாக்க மலைப்பகுதிகளில் சரணாலயம் அமைக்க பறவை பாதுகாப்பு அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன.
மலைச்சாரலை பணப்பயிர் விளைவிக்கும் நோக்கில் மனிதன் அழித்து வருகிறான். மலைச்சாரலையே தமது வாழ்விடமாகக் கொண்டுள்ள இந்தப் பறவைகளுக்கு வேறு புகலிடம் ஏற்படுத்தி தர மனிதனால் முடியுமா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)