வெள்ளி, 16 அக்டோபர், 2009

பெண்களே இல்லாத நாடு. காரணம்? (தொடர்ச்சி) சிறிய விரல்; சுண்டு விரல்




1504ம் ஆண்டு இரண்டாம் ஜூலியஸ் இத்தாலியை ஆட்சி செய்துவந்தான். சர்வ அதிகாரத்தோடு ஆட்சி செய்த இவன், கொஞ்சம் கொஞ்சமாக இரக்க குணம் படைத்த மன்னனாக மாறத் தொடங்கினான். மக்களிடம் மதிப்பும் மரியாதையும் பெறத் தொடங்கிய அவன், “நான் இப்படி திடீரென மாறக் காரணம் என்ன?” என ஆராயத் தொடங்கினான்.
இயேசு நாதரின் ஆசிர்வாதமே என தெரிந்துக் கொண்ட இவன் பைபிளை படிக்கத் தொடங்கினான். பின் படித்ததை கண்முன் நிறுத்திப்பார்க்க ஆசைப்பட்டான். அப்போதுதான் மகா சிற்பி “மைக்கேல் ஏஞ்சலோ” மனதில் தோன்றினார். உடனே அவருக்கு அழைப்பு விடுத்தான்.
“வாடிகன் நகரில் இருக்கும் மிகப்பெரிய தேவாலயமான சிஸ்டைன் மாதா கோவிலின் மேற்கூரையில் பைபிளில் உள்ள முக்கிய உயிரோட்டமான பகுதிகளை ஓவியமாக தீட்டவேண்டும் உடனே அதற்கான வேலையில் இறங்கவேண்டும்” இது அப்போது போப் ஆண்டவராக இருந்த இரண்டாம் ஜூலியின் கட்டளை.
அதற்கு மறுப்பு தெரிவித்த ஏஞ்சலோ. “நான் வெறும் சிற்பியே. ஓவியன் அல்ல. என்னால் முடியாது” என மறுப்பு தெரிவித்துவிட்டார். பதிமூன்று அடி உயரம் இறுக்கமான உருண்டு திரண்ட தசைகளுடன் டேவிட் சிலையை வடித்த உங்களால் மட்டுமே பத்தாயிரம் சதுர அடி பரப்பில் ஓவியங்களை தீட்ட முடியும்; தயவு செய்து இப்பணியை ஏற்றுக் கொள்ளுங்கள் என இரண்டாம் ஜூலியஸ் வேண்டுகோள் வைக்க மைக்கேல் ஏஞ்சலோ இக்கஷ்டமான வேலையை ஏற்றுக்கொண்டார்.
ஆதாமின் பிறப்பு, ஏவாளின் படைப்பு, உலகத்தில் மற்ற உயிர்கள் தோன்றல், மனித இனம் உருவாதல், மனித இனம் நன்மை, தீமைகளை பிரித்து அறிய பழகிக் கொண்ட விதம் என பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் அத்தனை பைபிள் காட்சிகளையும் ஏஞ்சலோ மிக அற்புதமாக தூரிகைகளால் படைத்த விதம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் போற்றப்பட்டது.



மின்சார விளக்குகள், நவீன பெயிண்ட்கள், முன்மாதிரி ஓவியங்கள் எதுவுமே இல்லாத அக்காலத்தில் இரவு, பகல் என்று பாராமல் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முயற்சி செய்து வரைந்த இவ்வோவியம் உலகின் தலைசிறந்த முதல் ஓவியமாக திகழ்கிறது.சிஸ்டைன் மாதாக் கோயில் கூரை முழுவதும் மனிதனின் அசைவில் ஏற்படும் மடிப்புகளை, முக மாற்றங்களை, அங்கங்களைக்கூட இவர் 340 ஓவியர்கள் மூலம் தத்ரூபமாக வரைந்திருந்தாலும் இவரது தலையாய படைப்பு என்ன தெரியுமா?
ஆதாமின் பிறப்புதான். உயிரற்ற உடம்பாக முதலில் ஆதாமை படைத்த இறைவன் பின் ஆதாமின் சுண்டு விரலை இறவன் தீண்டியதால் ஆதாம் உயிர் பெற்று எழுந்ததாகச் சொல்லும் பைபிள் காட்சியை மைக்கேல் ஏஞ்சல் ஓவியமாக தீட்டியது ஓவியர்களுக்கு வேதமாக அந்த ஓவியம் திகழ்கிறது. இறைவன் ஆதாமின் சிறிய விரலை சுண்டி உயிர்பெற வைத்தல் சிறிய விரலை நாம் சுண்டு விரல் என அழைத்து வருகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக