வெள்ளி, 16 அக்டோபர், 2009

மனிதனால் முடியுமா?

இயற்கையின் அற்புதங்கள் அவிழும்போது ஆச்சரியம் மிகுகிறது.அந்த அற்புதங்கள் அழிவதை அறியும்போது வேதனை யில் நெஞ்சம் வேகிறது.
மனிதன் தனது சுயநலத்திற்காக இயற்கை தேவதையை சிதைக்கிறான்; வதைக்கிறான். அவனது வதைப்படலம் தொடருகிறது.
அந்த வதைப்படலத்தில் அழிந்துகொண்டிருக்கும் ஒரு அற்புத பறவையை கண்டுபிடித்து நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அது, மிகச்சிறிய உடலமைப்பு கொண்டது. ஆனால், அதன் உடலைமைப்பைப் போல இருமடங்கு நீண்ட வால் உடையது. அந்த வாலின் நுனி கரண்டியின் அகன்ற வாயைப் போல இருக்கிறது. அதனால் இதனை கரண்டி வால் பாடும் பறவை என அழைக்கின்றனர்.
ஆண் மயிலுக்கு நீண்ட தோகை இருப்பதுபோல, ஆண் பறவைக்கு மட்டுமே இந்த நீண்ட வால் இருக்குமாம். உலகில் இந்த வகைப் பறவைகள் 250 முதல் ஆயிரம்தான் இருக்கின்றனவாம்.இவை தமது வால் அசைப்பின் வேகத்தில்தான் தங்கள் ஜோடியை ஈர்க்கின்றனவாம்.
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் இவை காணப்படுகின்றன. அழிந்துவரும் இந்த அற்புதப் பறவையை பாதுகாக்க மலைப்பகுதிகளில் சரணாலயம் அமைக்க பறவை பாதுகாப்பு அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன.
மலைச்சாரலை பணப்பயிர் விளைவிக்கும் நோக்கில் மனிதன் அழித்து வருகிறான். மலைச்சாரலையே தமது வாழ்விடமாகக் கொண்டுள்ள இந்தப் பறவைகளுக்கு வேறு புகலிடம் ஏற்படுத்தி தர மனிதனால் முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக