"கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும், காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,ஓசைகளும் நம்மையறியாமலேயே நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன. பதிந்து நமக்குத் தெரியாமலேயே நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன."
செவ்வாய், 13 அக்டோபர், 2009
பலம் பலவீனம் !
ஒருவருடைய பலம் எது என்றால் அவர் தனது பலவீனத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே அவரது பலம் என்று சொல்ல முடியும். அரசியல் வாதிகள் - நடிகை ரகசிய தொடர்பு தெரியவந்தால் ஊருக்கே தெரிந்துவிடும். அண்மையில் மலேசிய அமைச்சர் ஒருவரின் லீலைகள் படமாக ஆக்கப்பட்டு கள்ளச் சந்தையில் சக்கைப் போடுபோடுவதாக சொல்கிறார்கள். சமூக விரோதம் என்று இல்லாமல் பொதுவில் இழிவாக நினைக்கப்படுகின்ற ஒன்றை அதாவது யாருக்கும் பாதிப்பின்றி தானே விரும்பிச் செய்யும் தனிமனித செயல்களை / அபிலாசைகளை பலவீனம் என்று சொல்ல முடியுமா ? இருந்தாலும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் அப்பழுக்கில்லாதவர்களாக இருந்தால் தான் தலைமைத்துவ தகுதி இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். மேற்சொன்ன சர்சைக்குறிய அமைச்சரை அவரது இல்லத்தினர் மன்னித்துவிட்டதாக சொல்லி இருந்தார்.பொதுவாழ்வில் உள்ளவர்களை விடுவோம், தனிப்பட்ட ஒருவர் குறித்து,ஜெயகாந்தன் கதை ஒன்றில் சின்ன வீடு வைத்திருக்கும் கணவரை கண்டித்த மகனை தாய் கண்டிக்கிறார். அது அவருக்கும் எனக்கும் உள்ள பிரச்சனை, அதையும் தாண்டி அவரை நேசிக்கிறேன், பிடிக்காவிட்டாலும் ஏற்றுக் கொள்கிறேன். என்பது போல் முடியும். அந்த கதையில் குறிப்பிட்ட ஒரு வரி ரொம்பவே யோசிக்க வைத்தது "ஒருவரை ஏற்றுக் கொள்வது என்பது அவரது பலவீனத்தையும் சேர்த்துதான்", உண்மையாக யாரையாவது நாம் நேசித்தால், ஒருவேளை அவரது பலவீனம் தெரிய வந்தால், அந்த பலவீனமும் சேர்ந்தது தான் முழுமையான அவர். அவரை வெறுப்பதற்கு அவரது பலவீனம் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பது போல் எனக்கு புரிந்தது.நெருங்கியவர்களின் பலவீனங்கள் நமக்கு தெரியவரும் போது அப்போது அமைதியாக பெரும்தன்மையாக இருந்துவிட்டு சமயம் கிடைக்கும் போது போட்டு உடைத்து அவமானப்படுத்திவிடுவோம். இது ஏறக்குறைய எல்லோருக்கும் இருக்கும் பலவீனம் தான். இதற்கு வெட்கப்பட்டு இருக்கிறோமா ? பலம் என்பது பலவீனத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே. அடுத்தவர்களின் பலவீனத்தை சமயம் கிடைக்கும் போது வெளிப்படுத்துவது, தன்மீது அவர் வைத்திருக்கும் மதிப்பிற்கு எதிரான 'சந்தர்பவாதி' என்ற பலவீனம் தான்.நண்பர்களோ, உறவினர்களோ எதாவது ஒன்றில் பலவீனமாக இருந்தால் சொல்லிப் பார்க்கலாம், அவர்களால் நமக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொள்ளாது என்று நன்கு உணர்ந்திருந்து, அவர்களின் பலவீனத்தால் அவர்களை வெறுப்பது என்பது, எதையும் 'அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு பழகிக் கொள்ளாத மனக்குறை' என்ற நம்முடைய பலவீனம் தான்.புரியாதவர்கள் கை தூக்குங்கள் ! எளிமையாகச் சொல்லப் போனால்மனைவி அருகில் இருக்கும் போது மற்ற பெண்களை சைட் அடிக்கும் கணவரை பெரும்பாலும் 'கணவரின் பலவீனம்' என்று புரிந்து கொண்டுதான் மனைவியர் பெருந்தன்மையாக விட்டுவிடுகின்றனர்.
மனித உடல் பற்றிய அபூர்வ தகவல்கள்!
நமது மனித உடல்கள் பற்றிய பல தகவல்கள் தற்போதும் ஆராயப்பட்டு பல உண்மைகள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் பல நமக்கு ஆச்சரியத்தையும் ஏன் அதிர்ச்சியையும் கூட ஏற்படுத்தும்.அதுபோன்று நமது உடல் பற்றிய சில தகவல்கள் இங்கே...
பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.
ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.
நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.
நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.
நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.
உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.
900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.
மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.
பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.
ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.
நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.
நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.
நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.
உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.
900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.
மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)