மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.
தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு
சோர்வு
வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு
தோல் வெளுத்துக் காணப்படுதல்.
மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது
முன்புறமாக சாய வேண்டும்
தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ள் வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது
பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.
குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.
"கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும், காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,ஓசைகளும் நம்மையறியாமலேயே நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன. பதிந்து நமக்குத் தெரியாமலேயே நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன."
திங்கள், 3 ஆகஸ்ட், 2009
காந்திஜியின் உயில் என்ன சொல்கிறது?
காந்தியின் பொருட்கள் ஏலம் விடப்படும் நிலையில், அவர் கைப்பட எழுதிய உயிலில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை நவ ஜீவன் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதியு அந்த உயில், கடந்த 1940-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி எழுதப்பட்டுள்ளது.
அதாவது, "எனது பொருள்களை சொந்தம் கொண்டாடுவதற்கான சட்டப்பூர்வ உரிமை நவ ஜீவன் அறக்கட்டளைக்கு மட்டுமே உண்டு" என்று உயிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எனக்கு சொத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருந்தாலும், நமது சமூக வழக்கப்படியோ அல்லது சட்டத் தேவைக்காகவோ எனக்குச் சொந்தமான அசையும், அசையா பொருள்கள், நான் எழுதிய புத்தகங்கள் அல்லது இனி எழுதவிருக்கும் புத்தகங்கள் - அது அச்சிடப்பட்டிருந்தாலும் அச்சிடப்படாமல் இருந்தாலும் அவை யாவும் நவ ஜீவன் அறக்கட்டளைக்கே சொந்தம்" என்று உயிலில் அவர் குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.
பியார் லால் நாயர், கிஷோர்லால் ஜி மாஷ்ருவாலா ஆகிய இருவரும் சாட்சிகளாக கையெழுத்திட்டுள்ளனர்.
நவஜீவன் அறக்கட்டளை 1929-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி காந்தியால் நிறுவப்பட்டது.
காந்தியின் பொருள்கள் தங்களுக்கே சொந்தம் என்று நவஜீவன் அறக்கட்டளை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தப் பொருள்களை சட்டப்படி விலை கொடுத்து வாங்க வழியே இல்லை. சட்டவிரோதமாகவே எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்றும் தனது மனுவில் அறக்கட்டளை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதியு அந்த உயில், கடந்த 1940-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி எழுதப்பட்டுள்ளது.
அதாவது, "எனது பொருள்களை சொந்தம் கொண்டாடுவதற்கான சட்டப்பூர்வ உரிமை நவ ஜீவன் அறக்கட்டளைக்கு மட்டுமே உண்டு" என்று உயிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எனக்கு சொத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருந்தாலும், நமது சமூக வழக்கப்படியோ அல்லது சட்டத் தேவைக்காகவோ எனக்குச் சொந்தமான அசையும், அசையா பொருள்கள், நான் எழுதிய புத்தகங்கள் அல்லது இனி எழுதவிருக்கும் புத்தகங்கள் - அது அச்சிடப்பட்டிருந்தாலும் அச்சிடப்படாமல் இருந்தாலும் அவை யாவும் நவ ஜீவன் அறக்கட்டளைக்கே சொந்தம்" என்று உயிலில் அவர் குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.
பியார் லால் நாயர், கிஷோர்லால் ஜி மாஷ்ருவாலா ஆகிய இருவரும் சாட்சிகளாக கையெழுத்திட்டுள்ளனர்.
நவஜீவன் அறக்கட்டளை 1929-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி காந்தியால் நிறுவப்பட்டது.
காந்தியின் பொருள்கள் தங்களுக்கே சொந்தம் என்று நவஜீவன் அறக்கட்டளை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தப் பொருள்களை சட்டப்படி விலை கொடுத்து வாங்க வழியே இல்லை. சட்டவிரோதமாகவே எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்றும் தனது மனுவில் அறக்கட்டளை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புள்ளி வெச்சு, கோடு போடு…
2009 ஏப்ரல் 30
by bseshadriஅறிவியலோ, பொறியியலோ, நிறையப் பரிசோதனைகள் செய்யவேண்டியிருக்கும். ஏதாவது கோட்பாடு ஒன்றை முன்வைப்பிர்கள். பின் சோதனை மூலம் சில பண்புகளை அளப்பீர்கள். அவற்றை அட்டவணை ஆக்குவீர்கள். பின்பு? ஒரு கிராப் தாளில் புள்ளிகளை வரைவீர்கள்.
இப்படித்தான் ஒரு கிராப் தாளில் சில புள்ளிகளை வைத்து, அவற்றை இணைக்கும் நேர்கோட்டை என் மனைவி வரைந்துகொண்டிருந்தார். அவர் இப்போது எம்.எஸ்சி இயல்பியல், அஞ்சல்வழிக் கல்வி பயின்று வருகிறார். இப்போது பிராக்டிகல் வகுப்புகள் நடக்கின்றன.
எட்டிப் பார்த்தேன். வருத்தத்துடன் பதில் வந்தது. “ஆன்சர் சரியா வரலை…”
தாளில் புள்ளிகள் அங்கும் இங்குமாக விரவிக் கிடக்க, இவர் குத்துமதிப்பாக ஒரு கோட்டை வரைந்து, அதன் சாய்மானத்தை (slope) கணக்கிட்டு, பிறகு அந்த எண்ணை ஒரு சமன்பாட்டில் செலுத்தி விடை கண்டுபிடிக்கவேண்டும். சோதனை, ஒரு பெர்ஸ்பெக்ஸ் பிளாஸ்டிக் தகட்டின் யங்ஸ் மாடுலஸையும் பாய்ஸான்ஸ் ரேஷியோவையும் கண்டுபிடிப்பது.
“இந்தப் புள்ளிகளுக்குப் பொருந்துமாறு ஏன் ஒரு நேர்கோட்டை fit செய்யக்கூடாது?” என்றேன்.
“அப்படியென்றால்?”
“நமக்குத் தேவை நேர்கோடு. ஆனால் எந்தக் கோட்டை வரைந்தாலும் அதில் அத்தனை புள்ளிகளும் உட்காரப் போவதில்லை. எனவே ஒரு குறிப்பிட்ட கோட்டை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும். எந்தப் புள்ளியும் அந்தக் கோட்டிலிருந்து மிக அதிகத் தொலைவில் இருந்துவிடக் கூடாது. அதாவது, அந்தப் புள்ளிகள் இந்தக் கோட்டிலிருந்து எவ்வளவு விலகியுள்ளதோ அந்த தூரங்களின் வர்க்கத்தைக் கூட்டி அதை minimise செய்யவேண்டும். கிடைக்கும் பதில்தான் நமக்குத் தேவையான கோடு…”
அவருக்குப் புரியவில்லை. இதை அவர் முன்னே பின்னே கேட்டிருந்ததே இல்லையாம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது இளநிலை மாணவர்கள் அனைவருக்குமே சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமே?
“இதை Microsoft Excel-லேயே செய்துவிடலாமே” என்றேன். செய்தும் காட்டினேன்.
கீழ்க்கண்ட அட்டவணையை எடுத்துக்கொள்ளுங்கள்:
x y
1.1 5
2.2 10
3.3 15
4.4 20
5.5 25
இதை Excel அழகான படமாக ஆக்கித் தந்துவிடும். ஒரு நேர்கோட்டை பொருத்து (fit) என்று அதனிடம் சொன்னால், செய்வதோடு மட்டுமல்லாமல், அதற்கான சமன்பாட்டையும் நமக்குக் கொடுத்துவிடும். $$y = 4.5455 x$$
ஆனால் கீழ்க்கண்ட அட்டவணையை எடுத்துக்கொள்ளுங்கள்.
x y
நுண்புழை இயக்கம் (Capillary Action)
விலங்குகள், தாவரங்கள் என அனைத்து உயிர்களுக்குமே உயிர்வாழ நீர் தேவை. ஆனால் விலங்குகள் நீர் எங்கே உள்ளது என்று தேடி அலையக்கூடியவை. ஆனால் தாவரங்கள் அப்படியா?
தாவரங்கள் ஓரிடத்தில் நிலை பெற்று நிற்கும் என்று நமக்குத் தெரியும். நம் தோட்டத்தில் உள்ள செடி, கொடி, மரங்களுக்கு நாம் நீர் பாய்ச்சுகிறோம். ஆற்றோரம் அல்லது குளத்தோரம் உள்ள தாவரங்கள் நீர் கிடைக்கும் இடம் நோக்கி தங்கள் வேர்களைக் கொண்டுசெல்லும்.
ஆனால், நீர் கிடைக்கும் இடத்துக்கு வேர் சென்றுவிட்டால் மட்டும் போதுமா? வேர் என்பது நீரை உறிஞ்சிக்கொள்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் இது சரியல்ல. நீர் என்பதுதான் வேர் மூலமாக தன்னை மேல்நோக்கிக் கொண்டுசெல்கிறது!
விலங்குகள் பலவற்றுக்கும் ‘இதயம்’ என்ற உறுப்பு உள்ளது. இந்த இதயம், ஒரு பம்ப் போல உடலின் பல பாகங்களுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. ஆனால், தாவரங்களுக்கு இதயம் போன்ற பம்ப் ஏதும் கிடையாது. அதனால், தாவரங்களால் நீரை அடியிலிருந்து ‘பம்ப்’ செய்து மேலே கொண்டுபோக முடியாது. புவி ஈர்ப்பு விசை, நீரை கீழ்நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும். ஆனால், அதைமீறி நீர் ஒரு மரத்தின், செடியின் மேல் பகுதிகளுக்கு எப்படிச் செல்கிறது?
‘நுண்புழை இயக்கம்’ என்று ஒரு கருத்து உண்டு. நுண்புழை என்றால், மெல்லிய, மயிரளவு அகலம் மட்டுமே உள்ள ஒரு குழாய். பள்ளிக்கூடங்களில் சோதனைச் சாலையில் இதனை நீங்கள் பார்த்திருக்கலாம். நீர் உள்ள பாத்திரத்தில் இந்த நுண்புழையைச் செருகுங்கள். பாத்திரத்தில் உள்ள நீர் மட்டத்துக்கு மேலாக இந்தக் குழாயில் நீர் ஏறும். அகலமான குழாயைச் செருகினால், நீர் மட்டம் மிகக் குறைவாகத்தான் ஏறும். மெல்லியதாக இருக்கும்போதுதான் இப்படி நீர், ஈர்ப்பு விசையை எதிர்த்துக்கொண்டு மேல் நோக்கிச் செல்லும்.
இதனால்தான், தாவரங்கள் மிக நுண்ணிய இழைகளாக தங்களது வேர்களை உருவாக்குகின்றன. இந்த வேர்களும் எங்கெல்லாமோ போய் நீரைத் தேடுகின்றன. நீர் கிடைத்துவிட்டால், இந்த நுண்புழை இயக்கம் காரணமாக, எந்த பம்பின் உதவியும் இல்லாமலேயே, நீர் மேல் நோக்கி உறிஞ்சப்படுகிறது.
இதென்ன பெரிய விஷயம்? எந்த திரவமும் இப்படித்தானே இயங்கும், இதில் நீருக்கென்ன சிறப்பு என்று நீங்கள் கேட்கலாம். நீர் அளவுக்கு எந்த திரவமும் இப்படியான நுண்புழை இயக்கம் கொண்டதல்ல. சொல்லப்போனால் பாதரசம் போன்ற திரவம் முற்றிலும் நேர் எதிராக வேலை செய்யும். ஒரு நுண்புழையை பாதரசம் உள்ள பாத்திரத்தில் செருகினால், அந்தக் குழாயில் பாதரசத்தின் மட்டம் குறைவானதாக இருக்கும்.
தாவரங்கள் உயிர்வாழ பாதரசம்தான் தேவை என்றால், தாவரங்களின் கதி அம்பேல்தான்!
from → இயற்பியல்
தாவரங்கள் ஓரிடத்தில் நிலை பெற்று நிற்கும் என்று நமக்குத் தெரியும். நம் தோட்டத்தில் உள்ள செடி, கொடி, மரங்களுக்கு நாம் நீர் பாய்ச்சுகிறோம். ஆற்றோரம் அல்லது குளத்தோரம் உள்ள தாவரங்கள் நீர் கிடைக்கும் இடம் நோக்கி தங்கள் வேர்களைக் கொண்டுசெல்லும்.
ஆனால், நீர் கிடைக்கும் இடத்துக்கு வேர் சென்றுவிட்டால் மட்டும் போதுமா? வேர் என்பது நீரை உறிஞ்சிக்கொள்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் இது சரியல்ல. நீர் என்பதுதான் வேர் மூலமாக தன்னை மேல்நோக்கிக் கொண்டுசெல்கிறது!
விலங்குகள் பலவற்றுக்கும் ‘இதயம்’ என்ற உறுப்பு உள்ளது. இந்த இதயம், ஒரு பம்ப் போல உடலின் பல பாகங்களுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. ஆனால், தாவரங்களுக்கு இதயம் போன்ற பம்ப் ஏதும் கிடையாது. அதனால், தாவரங்களால் நீரை அடியிலிருந்து ‘பம்ப்’ செய்து மேலே கொண்டுபோக முடியாது. புவி ஈர்ப்பு விசை, நீரை கீழ்நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும். ஆனால், அதைமீறி நீர் ஒரு மரத்தின், செடியின் மேல் பகுதிகளுக்கு எப்படிச் செல்கிறது?
‘நுண்புழை இயக்கம்’ என்று ஒரு கருத்து உண்டு. நுண்புழை என்றால், மெல்லிய, மயிரளவு அகலம் மட்டுமே உள்ள ஒரு குழாய். பள்ளிக்கூடங்களில் சோதனைச் சாலையில் இதனை நீங்கள் பார்த்திருக்கலாம். நீர் உள்ள பாத்திரத்தில் இந்த நுண்புழையைச் செருகுங்கள். பாத்திரத்தில் உள்ள நீர் மட்டத்துக்கு மேலாக இந்தக் குழாயில் நீர் ஏறும். அகலமான குழாயைச் செருகினால், நீர் மட்டம் மிகக் குறைவாகத்தான் ஏறும். மெல்லியதாக இருக்கும்போதுதான் இப்படி நீர், ஈர்ப்பு விசையை எதிர்த்துக்கொண்டு மேல் நோக்கிச் செல்லும்.
இதனால்தான், தாவரங்கள் மிக நுண்ணிய இழைகளாக தங்களது வேர்களை உருவாக்குகின்றன. இந்த வேர்களும் எங்கெல்லாமோ போய் நீரைத் தேடுகின்றன. நீர் கிடைத்துவிட்டால், இந்த நுண்புழை இயக்கம் காரணமாக, எந்த பம்பின் உதவியும் இல்லாமலேயே, நீர் மேல் நோக்கி உறிஞ்சப்படுகிறது.
இதென்ன பெரிய விஷயம்? எந்த திரவமும் இப்படித்தானே இயங்கும், இதில் நீருக்கென்ன சிறப்பு என்று நீங்கள் கேட்கலாம். நீர் அளவுக்கு எந்த திரவமும் இப்படியான நுண்புழை இயக்கம் கொண்டதல்ல. சொல்லப்போனால் பாதரசம் போன்ற திரவம் முற்றிலும் நேர் எதிராக வேலை செய்யும். ஒரு நுண்புழையை பாதரசம் உள்ள பாத்திரத்தில் செருகினால், அந்தக் குழாயில் பாதரசத்தின் மட்டம் குறைவானதாக இருக்கும்.
தாவரங்கள் உயிர்வாழ பாதரசம்தான் தேவை என்றால், தாவரங்களின் கதி அம்பேல்தான்!
from → இயற்பியல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)